துருக்கி-சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி-சிரியா எல்லைப் பகுதிகளில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டது. இதில் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; 900க்கும் மேற்பட்டோர் படுகாயம். துருக்கியில் 912 பேரும், சிரியாவில் 326 பேரும் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரலாம் அஞ்சப்படுகிறது.